8 வரு­டங்­களின் பின் சவூதியிலிருந்து மூதூர் பணிப்பெண்ணின் சடலம்



சவூதி அரே­பி­யா­வுக்குப் பணிப் பெண்ணாகச் சென்ற இளம் தாய் ஒருவர் எட்டு வரு­டங்­களின் பின்னர் சட­ல­மாக கொண்டுவரப்பட்ட சோகமயமான சம்பவமொன்று இடம்­பெற்­றுள்­ளது.
மூதூர் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட நீலாக்­கேணி எனும் கிரா­மத்­தைச்­சேர்ந்த ஐந்­து ­பிள்ளைகளின் தாயான மாணிக்­க­ராஜா காளிஸ்­வரி என்ற 37 வயது பெண்ணின் சடலமே இவ்வாறு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தனது குடும்ப கஷ்டம் கார­ண­மாக உள்­ளூ­ரைச்­ சேர்­ந்த ­வெ­ளி­நாட்­டுக்கு பணிப்­பெண்­களை அனுப்பி வைக்கும் முகவர் ஒரு­வ­ரு­டைய உத­வி­யுடன் கடந்த 2007 ஆம் ஆண்டு சவூதி அரே­பி­யா­வுக்கு பணிப்­பெண்­ணா­க­ இவர் சென்­றுள்ளார்.
சவூதிக்­குப்­போன காளிஸ்­வரி தனது பிள்­ளை­க­ளுக்கு இரண்டு மாதங்கள் மாத்­தி­ரமே 19.500 ரூபா வீதம் பணம் அனுப்பிவைத்துள்ளார்.அதன்பின் அவ­ரி­ட­மி­ருந்து எந்த தக­வலும் வரா­த­ நி­லை­யில்­ அ­வ­ரு­டைய கணவர் மற்றும் பெண்ணின் சகோ­தரர் நல்­லூ­ரி­லுள்ள உள்ளூர் முக­வரிடம் சென்று விசா­ரித்­த­போது மேற்­படி முகவர் அப்பெண் வெளி­நாட்­டுக்குச் சென்ற ஆவ­ணங்­களை அவர்­க­ளிடம் கைய­ளித்­துள்ளார்.
கடந்த எட்­டு­ வ­ரு­டங்­க­ளுக்கு மேலாக காளிஸ்­வ­ரிக்கு என்ன நடந்­தது என்று அ­றியமுடி­யாமல் தவித்­துக்­கொண்­டி­ருந்த குடும்­பத்­தி­ன­ருக்கு கடந்த 7 ஆம் திகதி நல்லூர் கிராம அபி­வி­ருத்­திச்சங்கத் தலை­வ­ரி­ட­மிருந்து செய்­தி­யொன்று வந்­தி­ருக்­கி­றது.
நீலாக்­கே­ணியைச் சேர்ந்த ஒரு­வ­ரு­டைய பிரே­தப் ­பெட்டி கொழும்­புக்கு வந்­தி­ருக்­கி­ற­தென புல­னாய்­வுத்­து­றை­யைச்­சேர்ந்த ஒருவர் தமக்­குத் ­தெ­ரி­வித்­த­தாக கிராம அபி­வி­ருத்­திச்­சங்க தலைவர் அவர்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருக்கிறார்.
இதனையடுத்து காளிஸ்­வ­ரியின் குடும்­பத்­தினர் இச்­செய்தி பற்றி யாரிடம் விசா­ரிப்­பது எ­னத் ­தெ­ரி­யாத நிலையில் பொலி­ஸாரின் உத­வியை நாடி­யுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.