அனுஷ பெல்பிட்டவை இடைநிறுத்த தீர்மானம்



அரச நிர்வாக சேவையில் ஈடுபட்டிருந்த அனுஷ பெல்பிட்ட மற்றும் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க ஆகியோரை சேவையில் இருந்து இடைநிறுத்துவதற்கு அரச சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஆணைக்குழு இன்று மாலை கூடி ஆராய்ந்த பின்னர் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அரச நிர்வாக சேவை ஆணைக்குழுவின் செயலாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார்.
இந்தத் தீர்மானத்தை அரச நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு அறிவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.