முஸம்மில் விளக்கமறியலில்



தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹம்மத் முஸம்மிலை
விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.