இன்றுடன் A/L கருத்தரங்குகள்,பயிற்சி வகுப்புக்களுக்கும் தடை



இன்று நள்ளிரவு 12 மணியுடன் உயர் தர மாணவர்களுக்கான அனைத்து கருத்தரங்குகள், மற்றும் பயிற்சி வகுப்புக்கள் நடாத்துதல் தடைசெய்யப்படுவதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது
சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், அச்சு ஊடக வெளியீடு, ஆவணங்கள் விநியோகம் அத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம். என். ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

குறித்த இத் தடையை மீறியவர்கள் தொடர்பில், பொலிஸ் அவசர பிரிவு தொலைபேசி இலக்கம்கா,பொலிஸ் தலைமையகம், அத்துடன் பரீட்சைகள் திணைக்களம் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.