அவசர அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம்



இலவச சுகாதார சேவையை மேலும் திறம்பட மேற்கொள்ளும் வகையில் அவசர அம்பியூலன்ஸ் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டது.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் பிரதிபலனாக இந்த அவசர அம்பியூலன்ஸ் சேவை இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கு 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அவசர அம்பியூலன்ஸ் சேவையின் அங்குரார்ப்பண வைபவம் கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டது.