-எம்.எஸ்.எம். ஹனீபா-
அம்பாறை, நிந்தவூர் பிரதான வீதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். அட்டாளைச்சேனையிலிருந்து நிந்தவூர் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியை முந்திச் செல்வதற்கு முற்பட்ட போது,முச்சக்கர வண்டியில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களுமே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து தொடர்பாக சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

