(க.கிஷாந்தன்)
‘நீங்கள் தீ வைப்பது காட்டுக்கா அல்லது உங்கள் பிள்ளையின் எதிர்காலத்திற்கா’? என்ற வினாவுடன் கூடிய தொணிப்பொருளை மையமாகக் கொண்டு, ஊவா பரணகம பொலிஸார், கிராமசேவகர்கள், மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் போன்றாரை தெளிவூட்டும் நிகழ்ச்சித்திட்டமொன்று 24.09.2016 அன்று ஊவா பரணகமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, வனங்களின் முக்கியத்துவம், வனங்களை பாதுகாப்பதன் அவசியம் காடுகளுக்கு தீ வைப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு தெளிவூட்டப்பட்டது.
வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் பதுளை மாவட்டக் காரியாலயம், வெலிமடை வனவள காரியாலயம் என்பன இணைந்து இவ் தெளிவூட்டும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

