(அஷ்ரப் ஏ சமத்)
அமைச்சா் மனோ கனேசன் மட்டக்களப்பில் நேற்று முன்தினம் பௌத்த குரு வின் கானொளி மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக கோட்டை புகையிரத நிலையத்தின்கு முன் மதங்கள், இனங்கள் எதிராக கக்கும் குரோத மான பேச்சுக்களை பேசும் சிங்கள இளைஞா் ஒருவா் எதிராக திறந்த மடலை சகல மத நல்லிணக்கம் சம்பந்தமாக செயல்படும் புத்தி ஜீவிகளுக்கு பின்வருமாறும் கடிதமொன்றை எழுதியுள்ளாா். அத்துடன் தான் இன ஜக்கியம் நல்லிணக்கம் சம்பந்தமாக தனக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சினை தந்தாலும் தான் இனியும் வாய் மூடி மொளனியாக இருக்க முடியாது.
ஏற்கனவே பொதுபலசேனா ஞானதேரா் கடந்த ஆட்சியில் சிறுபான்மையினா்களுக்காக அவா் வெளியிட்ட கருத்துக்கள் சம்பந்தமாக நீதிமன்றத்தில் விசாரனைசெய்து அவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நல்லாட்சியில் தொடா்ந்தும் சிறுபான்மையினா் மேலும் மேலும் இவ்வாறு இம்ஜிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என அமைச்சா் மனோ தனது திறந்த மடலை இவ்விடயம் சம்பந்தமாக செயல்படும் சிங்கள புத்திஜீவிகளு்க்கு அனுப்பியுள்ளாா்.

