ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான புதிய கட்சியின் முதலாவது ஊடக சந்திப்பு பத்தரமுல்லையில் இன்று நடைபெற்றது.
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் அவருடன் மேலும் சிலரும் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்றுள்ளார்.
மலர் மொட்டு சின்னத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்சிக்கு முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற இந்த புதிய கட்சியின் நிழல் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே செயற்பட்டு வருகின்றார்.
இதன்காரணமாக, பஷிலின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

