தனமல்வில - பலஹருவ வனப் பகுதியில் கஞ்சா பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொஸ்லந்த பொலிஸ் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பினை முன்னெடுத்துள்ளதுடன் இவை 8 கோடி பெறுமதி வாய்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் இன்று பண்டாரவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

