எந்தவொரு பதவியும் வழங்கப்படவில்லை!



மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனுக்கு நிதி அமைச்சில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக வௌியான தகவல்களை அந்த அமைச்சு மறுத்துள்ளது. 

இதற்கமைய அர்ஜூன மகேந்தரன் மத்திய வங்கியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக வௌியான தகவல் உண்மையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 

நிதி அமைச்சின் தகவல் பணிப்பாளர் எம்.அலிஹசனின் கையெழுத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.