அக்கரைப்பற்றில் பல்வேறு நிகழ்வுகள் - ஜனாதிபதி பதவியேற்று இருவருட பூர்த்தி



அப்துல் கபூா்

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திாிபால சிாிசேன அவா்களின் பதவிப்பிரமாண 02வது வருட பூா்த்தியை முன்னிட்டு அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிாிவில் பல்வறு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அக்கரைப்பற்று - பள்ளிக்குடியிருப்பு -01 மற்றும் பள்ளிக்குடியிருப்பு - 02 பிாிவினரும் இணைந்து சிரமதானம் மரநடுகை மற்றும் மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வினை அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பாயிஸ ா மஹா வித்தியாலயத்தில் நடாத்தினாா்கள். 
அதைபோல் அக்கரைப்பற்று - 03 கிராம அபிவிருத்திச் சங்கமும், ஸன்ரைஸ் விளையாட்டுக் கழகமும் இணைந்து வடிகான் சுத்திகாிப்பு சிரமதானம், சங்க நுாலக துப்பரவு முதலிய சிரமதானம் மற்றும் மரநடுகை என்பன நடாத்தப்பட்டன..அக்கரைப்பற்று - 03 கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவா் ஏ.ஜி.அப்துல் கபூா் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் ஸன்ரைஸ் விளையாட்டுக் கழக செயலாளா் எம்.எச்.ஜெயினுதீன், பொளாதார அபிவிருத்தி உத்தியோகத்தா் கே்.எம்.கபீா், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தா் எம்.சுபஹாான், ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தா் எம்.ஐ.உதுமா லெவ்வை கிராம அபிவிருத்திச் சங்க செயலாளா் ஏ.ஸாகிா் ஏ. ஹுஸைன் மற்றும் உறுப்பினா்கள் ,ஸன்ரைஸ் விளையாட்டுக் கழக உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.