முதலமைச்சர் பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலர் சசிகலா ஆகிய இருவரையும் சந்தித்து அவர்களது நிலைப்பாட்டைக் கேட்டறிந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், எந்த முடிவையும் அறிவிக்காததால், தமிழக அரசியலில், அடுத்தது என்ன என்ற மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது.
வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மும்பையிலிருந்து சென்னை வந்த ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், மாலை 5.30 மணிக்கு பன்னீர் செல்வத்துக்கு நேரம் ஒதுக்கினார். தனது ஆதரவாளர்களுடன் வந்து ஆளுநரைச் சந்தித்த பன்னீர் செல்வம், மீண்டும் தர்மம் வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இரவு 7.30 மணிக்கு, மூத்த அமைச்சர்களுடன் ஆளுநரைச் சந்தித்தார் சசிகலா. தனக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியை வழங்கி, தான் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

