புத்தளம் பகுதியில் 700க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் காய்ச்சலைக் கண்டறியும் பொருட்டு நோயாளர்களின் இரத்த மாதிரிகளை வைத்திய பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக புத்தளம் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சுமித் அத்தநாயக்க தெரிவித்தார்.
வைரஸ் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு சிறுவர் பிரிவில் 70 பேரும் வெளிநோயாளர் பிரிவில் 160 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

