இறால் பிடிக்கச் சென்றவர் இரையானர்



சுண்டிக்குளம் கடலுக்கு இரால் பிடிப்பதற்காக சென்ற 32 வயது நபர் ஒருவர நேற்று வெள்ளிக்கிழமை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 

வெள்ளிக்கிழமை காலை இரால் பிடிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை என தெரிவித்து தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது குறித்த நபர் சடலமாக காணப்பட்டமை தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, 

குறித்த நபர் கிளிநொச்சி கண்ணகிநகரை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.