சிரியா: `ரசாயன' தாக்குதலில் 58 பேர் பலி



இட்லிப் மாகாணத்தில் நடத்தப்பட்ட நச்சுவாயு தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் தாக்குதலில் குறைந்தது 58 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவின் வட பகுதியிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டோரில் பெரும்பாலானோர் பொது மக்கள் என்று மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது.
கான் ஷேக்ஹளன் நகரில் நிலவும் சூழ்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக உள்ளூர் ஆம்புலன்ஸ் சேவை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.
சிரியாவில் நச்சு வாயு தாக்குதல்படத்தின் காப்புரிமைAFP
பலர், பெரும்பாலும் குழந்தைகள், தெருக்களில் திக்குமுக்காடுவதாக அவர் கூறியுள்ளார்.
எதிரணியினர் மீது அரசு ரசாயன ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருவதாக கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் அவையும், பிறரும் அரசை குற்றஞ்சாட்டி வந்துள்ளனர்.

இதனை மறுத்திருக்கும் அரசு, தடை செய்யப்பட்ட மூலப்பொருட்களை கொண்டு கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.