இட்லிப் மாகாணத்தில் நடத்தப்பட்ட நச்சுவாயு தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் தாக்குதலில் குறைந்தது 58 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவின் வட பகுதியிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டோரில் பெரும்பாலானோர் பொது மக்கள் என்று மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது.