வசந்தகால மலர் கண்காட்சி



(க.கிஷாந்தன்)

நுவரெலியாவில் தற்போது உள்நாட்டு வெளிநாட்டு பிரயாணிகள் மற்றும் வெளிமாவட்ட பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இங்கு தொடர்ந்து நடைபெறும் களியாட்ட நிகழ்வுகளில் பெரும்பாலானோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இதன் ஒரு கட்டமாக நடைபெற்று கொண்டிருக்கும் மலர் கண்காட்சிக்கு நுவரெலியா விக்டோரியா பூங்கா 19.04.2017 அன்று களைக்கட்டியது.

இங்கு பலவிதமான பூக்கள் பூத்து காணப்படுவதோடு, புதிய வகை பூக்கன்றுகளும் காணப்படுகின்றது. மேலும் பலவிதமான அழகிய கோணங்களில் பூக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அரிய வகை மலர்கள் கண்கவரும் வகையில் பார்வையாளர்களுக்கு காட்சியளிக்கின்றது.