மூதூரில்



மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் புதுவெளி வீதியில் முச்சக்கர வண்டியும் உழவு இயந்திரமும் மோதி விபத்துக்குள்ளாது.

முச்சக்கர வண்டியில் பயணித்த தோப்பூர் பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டியின் சாரதியான 55 வயது நபரும் முச்சக்கரவண்டியில் பயணித்த 14 வயது சிறுவனும் காயமடைந்த நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
(படப்பிடிப்பு: தீஷான் அஹமட்)