சுத்தமான குடிநீர் கேட்டதற்கு,சுடுமாறு கட்டளையிட்டவர் கைது



வெலிவேரிய - ரத்துபஸ்வல பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் கேட்டு போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டதாக கூறப்படும் பிரிகேடியர் அநுர தேசப்பிரிய குணவர்தன குற்றப் புலனாய்வு திணைக்களதத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 

தற்போது அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. 

கையுறைகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றினால் வௌியேற்றப்படும் கழிவுகள் மூலம் குடிநீரில் விஷத் திரவியங்கள் கலப்பதாக கூறி கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.