களுத்துறை – வெலிபென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் மரணமானார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிபென்ன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியகொரடுவ பகுதியில் குறித்த துப்பாக்கி;ச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் அவசர சேவை பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமானவர் கொஸ்கொட 2 ஆம் பிரிவைச் சேர்ந்த சாமர அபேசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது சடலம் தற்போது நாகொட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண விசாரணைகள் இன்று நடைபெறும்.
சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிபென்ன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியகொரடுவ பகுதியில் குறித்த துப்பாக்கி;ச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் அவசர சேவை பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமானவர் கொஸ்கொட 2 ஆம் பிரிவைச் சேர்ந்த சாமர அபேசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது சடலம் தற்போது நாகொட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண விசாரணைகள் இன்று நடைபெறும்.
சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment