கோயில்போரதீவு விபத்தில் ஒருவர் பலி



மட்டக்களப்பு படுவான்கரை, கோயில்போரதீவு பிரதான வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெரியபோரதீவு பட்டாபுரத்தை சேர்ந்த கொல்லன் தொழில் செய்யும் பிள்ளையான் தம்பி கிருஸ்ணபிள்ளை(மூத்தவன்) என்பவரே குறித்த விபத்தில் பலியாகியுள்ளார்.
இதேவேளை அவருடன் சென்ற மட்பாண்ட தொழில் செய்கின்ற புண்ணியமூர்த்தி என்பவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசா