கஞ்சிகுடிச்சாறுக் கிராமத்தில் யானை தாக்கி பெண் பலி



எஸ்.கார்த்திகேசு, வி.சுகிர்தகுமார்
திருக்கோவில், கஞ்சிகுடிச்சாறுக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிமை (28) இரவு காட்டு யானையின்  தாக்குதலுக்கு இலக்காகி முத்துப்பிள்ளை மகேஸ்வரி (வயது 53)  என்ற பெண் பலியாகியுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் கணவனும் மனைவியும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, வீட்டின் பின்புறச் சுவரை யானை உடைத்துள்ளது. இந்நிலையில், இவர்கள் வெளியில் வந்தபோது, இவர்களை யானை துரத்திச் சென்ற நிலையில், மேற்படி பெண்ணின் வயிற்றுப் பகுதியில் தாக்கியுள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.