லலித் ஜயசிங்கவுக்கு விளக்க மறியல்



கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்க விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தடுத்து வைக்குமாறு ஊர்காவற்றுறை பதில் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் சந்தேகநபர் தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைதானமை குறிப்பிடத்தக்கது.