நல்லூர் சம்பவம்: சந்தேகநபர் விளக்கமறியலில்



நல்லூரில் நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இன்று காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட அவர், யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.