வாகரையில் யானை தாக்கி ஒருவர் பலி



மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். 

வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய விவசாயியான கதிர்காமன் சின்னத்தம்பி என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

வாகரை பட்டிமுறிப்பு வயல் பிரதேசத்தில் வேளாண்மை நடவடிக்கைக்காக சென்றிருந்த போது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

யானை தாக்கியதில் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளார். 

சடலம் வாகரை வைத்தியசாலை பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.