அட்டாளைச்சேனையில் விழிப்புணர்வு




அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலம், அக்கரைப்பற்று பொலிஸாருடன் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும், அதிபர் ஏ.எம். மிஸ்பர் தலைமையில் இன்று (08) நடைபெற்றது.
இதன்போது, போதைப்பொருள் ஒழிப்புக்கு ஆதரவு தெரிவித்து, பதாதையில் கையொப்பங்கள் இடப்பட்டன.
இந்நிகழ்வில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் துஷ்பிரயோக பொறுப்பதிகாரி ஆர்.ஏ. திலக்புஸ்பகுமார, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதி அதிபர் எம்.எச்.றமீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
போதைப்பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் ஊர்வலம் சென்றனர்.