இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு 100 வீத வரி அறவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
உள்நாட்டு விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை குறித்து ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதியால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக்கு அமைய, எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு முழுமையாக வரி அறவிடப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் உள்நாட்டு விவசாயிகளுக்கு நியாயமான விலையில் பெரிய வெங்காயத்தை விற்பனை செய்ய முடியும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment