20வது சீர்திருத்தம், திருத்தங்களுடன் வந்தால், பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் கட்டாயம் எடுக்கப்படுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று (14.09) தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையில் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், வடமாகாண சபையின் நிலைப்பாடுகள் தொடர்பில் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.
20வது திருத்த சட்டம் தொடர்பாக எந்தவித திருத்தங்களும் வரவில்லை. அதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால், முறையாக பரிசீலித்து சரியான முடிவுக்கு வருவோம். இதுவரையில் திருத்தங்கள் செய்யப்பட்டு எமக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அண்மையில், கிழக்கு மாகாண சபையில் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு தமக்கு ஏதோ ஒரு வகையில் தெரிவிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சபையினர் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் விளங்காத்தன்மையினால் தமது ஆதரவினை தெரிவித்திருக்ககூடும். அதைப்பற்றி எமக்கு சரியாகத் தெரியாது. தற்போது இருக்கும் நிலையில், எமக்குத் தரப்பட்டது முன்னைய ஆவணம் மட்டுமே.
புதிய ஆவணம் திருத்தங்களுடன் வந்தால், கட்டாயம் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையில் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், வடமாகாண சபையின் நிலைப்பாடுகள் தொடர்பில் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.
20வது திருத்த சட்டம் தொடர்பாக எந்தவித திருத்தங்களும் வரவில்லை. அதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால், முறையாக பரிசீலித்து சரியான முடிவுக்கு வருவோம். இதுவரையில் திருத்தங்கள் செய்யப்பட்டு எமக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அண்மையில், கிழக்கு மாகாண சபையில் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு தமக்கு ஏதோ ஒரு வகையில் தெரிவிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சபையினர் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் விளங்காத்தன்மையினால் தமது ஆதரவினை தெரிவித்திருக்ககூடும். அதைப்பற்றி எமக்கு சரியாகத் தெரியாது. தற்போது இருக்கும் நிலையில், எமக்குத் தரப்பட்டது முன்னைய ஆவணம் மட்டுமே.
புதிய ஆவணம் திருத்தங்களுடன் வந்தால், கட்டாயம் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment