புத்தளம் - சிலாபம் வீதியில் முந்தலம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் பஸ் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 1.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்தவர்கள் நொச்சியாகம, ராஜங்கனய பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜங்கனய பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் இருந்து கல்விச் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காமடைந்தவர்களில் நால்வரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 1.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்தவர்கள் நொச்சியாகம, ராஜங்கனய பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜங்கனய பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் இருந்து கல்விச் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காமடைந்தவர்களில் நால்வரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment
Post a Comment