மீரா உம்மா காலமானார்




(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)

கிழக்கிலங்கையின் குயில், கிராமத்துக் கவி மீரா உம்மா இன்று இறக்காமத்தில் காலமானார். பிறவியிலேயே பார்வை இழந்த இவர், தனது மனக் கண்ணால், இயல்பாகவே, இயற்றிக் கவிபாடும் ஆற்றல் கொண்டவர்.

5 வயதில் தன் கண்ணைப் பற்றி ஆரம்பித்தார். 14ம் வயதில் அக்கரைப்பற்று புதுப்பள்ளியடியி நிகழ்ச்சியில் அரங்கேறியது. அக்கரைப்பற்றிலிருந்து மீரா உம்மாவின் குரல் பல இடங்களிலும் ரசிகர்களை கிழக்கிலங்கையில் கட்டிப் போட்டது.1975ல் கல்துனையில் நிகழ்ந்த சாகித்திய விழாவில், இவர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

தாலாட்டுப் பாடல்கள், அன்புப் பாடல்கள் எனக் கிராமியப் பாடல்களை தானாகவே இயற்றி ஆண் பெண் குரல்களில் பாடும் வல்லமை  கொண்டவர். 1980 களில் கிழக்கில் நாட்டார் பாடல்கள் மணந்தர மீரா உம்மா காரணமெனலலாம்.

முன்னொரு காலத்தில், திருமண வீடுகள், மனை புகு விழாக்கள், கத்னா வைபங்கள் எனப் பல்வேறு சடங்குகளிலும் அழைக்கப்பட்டவுடன், கலந் கொள்வார். கிராமிய மக்களை இனிய குரலால் சுமார் 5 தசாப்தங்கள் வரைக் கட்டிப் போட்டவர்.ஏதாவது தலைப்புக் கொடுத்தால் போலும், ஒப்பாரிப் பாடல்களையும் பாடி விடுவார்

இரவரது, பன்முக ஆற்றலுக்காக முன்னாள் முஸ்லிம் சமய கலாசார அமைச்சர், ஏ.ஏச்.எம். அஸ்வர், சௌத்துல் அந்தலிப விருது வழங்கிக் கௌரவித்தார்.

அன்னாருக்காக துஆ செய்வோம்.!