திவுலபிட்டிய துப்பாக்கிச் சூடு,மா.ச. உறுப்பினர் உட்பட 07 பேரும் விளக்கமறியலில்



திவுலபிடிய பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரன்டீர் ரொட்ரிகோ உட்பட 07 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட 07 சந்தேகநபர்களையும் எதிர்வரும் நவம்பர் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்று தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் திவுலப்பிட்டிய - கேன்பிடகெதர பகுதியில் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டையடுத்து 07 பேர் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரன்டீர் ரொட்ரிகோவும் உள்ளடங்குகிறார்.