ஏறாவூர், சவுக்கடியில் படுகொலை செய்யப்பட்ட தாய்-மகன் இருவரது உடல்களும் சற்று முன்னர் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டனர்.
மதுவந்தி (27) என்ற அந்தத் தாயும், அவரது மகனான மதுசன் (11) ஆகிய இருவரும் கடந்த 18ஆம் திகதி தீபாவளி தினத்தன்று மர்மமான முறையில், அவர்களது வீட்டில் கொல்லப்பட்டனர்.
இது குறித்து ஆராய்ந்த பொலிஸார், மோப்ப நாய்களுடன் தேடுதல் நடவடிக்கைகளில் இறங்கினர். அதன்போது, மூன்று பேரின் வீடுவரை சென்று நின்றதால் பொலிஸாருக்குச் சந்தேகம் எழுந்தது.
அதன்படி, குறித்த மூன்று வீடுகளையும் சேர்ந்த மூன்று பேரை பொலிஸார் விளக்கமறியலில் வைத்துள்ளனர். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மதுவந்தி (27) என்ற அந்தத் தாயும், அவரது மகனான மதுசன் (11) ஆகிய இருவரும் கடந்த 18ஆம் திகதி தீபாவளி தினத்தன்று மர்மமான முறையில், அவர்களது வீட்டில் கொல்லப்பட்டனர்.
இது குறித்து ஆராய்ந்த பொலிஸார், மோப்ப நாய்களுடன் தேடுதல் நடவடிக்கைகளில் இறங்கினர். அதன்போது, மூன்று பேரின் வீடுவரை சென்று நின்றதால் பொலிஸாருக்குச் சந்தேகம் எழுந்தது.
அதன்படி, குறித்த மூன்று வீடுகளையும் சேர்ந்த மூன்று பேரை பொலிஸார் விளக்கமறியலில் வைத்துள்ளனர். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment