இலங்கையின் முதலாவது சர்வதேச நியமங்களுக்கு அமைந்த சிறைச்சாலை



ஹம்பாந்தோட்டை,  அங்குனகொலபெலெஸ்ஸவில் புதிய சிறைச்சாலை கட்டடத் தொகுதி, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்துமத கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் இன்று (16) திறந்து வைக்கப்பட்டது.
நவீன சிறைச்சாலை வசதிகள்

01.    சிறைக் கைதிகள் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அமைக்கப்பட்ட முதலாவது சிறைச்சாலை
02.    ஆண்கள், பெண்கள் உள்ளடங்கலாக 1500 கைதிகள் சிறைப்படுத்தி வைத்திருக்க முடியும்
03.    65 ஏக்கர் வளாகம்
04.    நவீன தொழில்நுட்பம், பூரண பாதுகாப்பு
05.    வைத்தியசாலை, தொழிற்பயிற்சி நிலையம், கைத்தொழில் கட்டம்
06.    சிறைச்சாலை அதிகாரிகளுக்கான தங்குமிடம்
07.    மைதானம், 400 மீற்றர் தடகளம், நீச்சல் தடாகம், உள்ளக விளையாட்டரங்கு (அதிகாரிகள் மற்றும் அருகில் உள்ள பாடசாலை மாணவர்களின் உபயோகத்துக்கானது)
08.    சிற்றுண்டிச்சாலை, உணவு உண்பதற்கான இடம், பார்வையாளர் அறை
09.    விரிவுரை மண்டபம்
10.    செலவீனம் - 4996 மில்லியன் ரூபாய்