உதவி பொலிஸ் அத்தியட்சகர்,உடனடி இடமாற்றம்



உதவி பொலிஸ் அத்தியட்சகர் துஷார தலுவத்தவுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு கூறியுள்ளது. 

மாத்தறை பொலிஸ் பிரிவிற்கே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த வௌ்ளிக்கிழமை ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டத்தின் போது, நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக குறித்த பொலிஸ் அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டது. 

இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு கூறியுள்ளது.