முன்னாள் பிரதி அமைச்சர் சாந்தவுக்கு 4 வருடச் சிறை



முன்னாள் பிரதி அமைச்சர் ஷாந்த பிரேமரத்னவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, இன்று (02) உத்தரவிட்டுள்ளார். 
மேலும், 10,000 ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிடப்பட்டார். 
2007ஆம் ஆண்டில் அம்பாறை பிரதேசத்தில் பெண்ணொருவரிடம் 50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் முன்னாள் பிரதி அமைச்சருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.