தேர்தலை அரசாங்கத்தின் ஊழல் மோசடிக்கெதிரான கருத்துக் கணிப்பாக பயன்படுத்தவும்



எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை, அரசாங்கத்தின் ஊழல் மோசடிக்கு எதிரான மக்கள் கருத்தெடுப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

இந்த தேர்தலை அரசாங்கம் விருப்பத்துடன் மக்களுக்கு வழங்கவில்லை என்றும், தேர்தலை மிகவும் பிற்போட்டுவிட்டு இறுதியாக எடுக்கப்பட்ட தீர்மானம் இதுவென்றும் அவர் கூறினார். 

இதேவேளை ராஜபக்‌ஷ அரசாங்கத்தைப் போன்றே தற்போதைய அரசாங்கமும் மேற்கொள்கின்ற ஊழல் மோசடிகளுக்கு எதிரான் மக்களின் கருத்துக்கணிப்பாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று விஜித ஹேரத் கேட்டுக் கொண்டுள்ளார்.