யால மற்றும் ஹோர்டன் பிளேஸ் சரணாலயத்திற்கு சுற்றுலா செல்வதை தற்காலிகமாக தவிர்கவும்



ஹோர்டன் பிளேஸ் தேசிய சரணாலயம் மற்றும் யால தேசிய சரணாலயத்தின் இரண்டாம் இலக்க பிரிவிற்கு சுற்றுலா செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. 

ஹோர்டன் பிளேஸ் தேசிய சரணாலயத்தின் உட்செல்லும் பகுதி மற்றும் அதன் உள்வீதிகள் சில தற்போது நீரில் மூழ்கியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பபட்டு பணிப்பாளர் மஞ்சுள அமரரத்ன கூறினார். 

அதேவேளை நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக யால தேசிய சரணாலயத்தின் இரண்டாம் இலக்க பிரிவு தற்காலிகமாக மூடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

நிலவுகின்ற சீரற்ற காலநிலை சீரடையும் வரையில் ஹோர்டன் பிளேஸ் தேசிய சரணாலயம் மற்றும் யால தேசிய சரணாலயத்தின் இரண்டாம் இலக்க பிரிவிற்கு சுற்றுலா செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பபட்டு பணிப்பாளர் கூறியுள்ளார்.