மழை குறைவடைந்துள்ளதால், வௌ்ளமும் வடிந்து வருகிறது




மழையுடனான காலநிலை குறைவடைந்ததுடன், சில பகுதிகளில் இருந்த வௌ்ள நிலைமையும் குறைவடைந்து வருவதாக, அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் சில மாவட்டங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, ஒரு இலட்சத்து 6079 பேர் பாதிக்கப்பட்டதோடு, 61 பேர் காயமடைந்தனர். 

மேலும், 694 வீடுகள் முழுமையாகவும் 25,117 வீடுகள் பகுதியளவிலும் தேசமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.