ரோஹித் சர்மா இரட்டைச் சதமடித்து,இல்லாளுக்கு இனிப் பளித்தார்



இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு 393 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி ஆரம்பமானது. 

இதில், நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதற்கமைய, களமிறங்கிய இந்திய அணியின் ரோஹித் சார்மா மற்றும் தவான் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வௌிப்படுத்தினர். 

தவான் 68 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்ததாக ஹோகித்துடன் இணைந்த ஷ்ரேயாஸ் அய்யர், இலங்கை பந்து வீச்சாளர்களை களங்கடித்தனர். 

பின்னர், 88 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்து வௌியேறினார். 

பின்னர் வந்த தோனி 7 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் ஆட்டமிழக்க அடுத்ததாக வந்த பாண்டிய நிதான ஆட்டத்தை வௌிப்படுத்தினார். 

இதுஇவ்வாறு இருக்க, மறுபுறம் அதிரடியாக ஆடிய, அணித் தலைவர் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காது 208 ஓட்டங்களை விளாசினார். 

இதன்படி, 4 விக்கெட்டுக்களை மட்டு​மே இழந்த இந்தியா 392 ஓட்டங்களைக் குவித்துள்ளது. 

எனவே, 393 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற கடினமான இலக்கு இலங்கைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.