அரச நத்தார் விழா…



அரச நத்தார் தின விழா, “அன்பின் பிறப்பே நத்தார்” எனும் தொனிப்பொருளிலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில், இன்று (16)  ஆரம்பமானது.
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சும் கிறிஸ்தவ மத திணைக்களத்தினூடாக ஒருங்கமைக்கப்பட்ட  இந்நிகழ்வில் அமைச்சர் ஜோன் அமரதுங்க, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, நாடாளுமன்ற உறுப்பினர்  அப்துல்லாஹ்
மஹ்ரூப்,  பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, மாகாண சபை உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு: அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், எம். எஸ். அப்துல் ஹலீம்)