காட்டு யானையின் தாக்குதலால் ஒருவர் உயிரிழப்பு



ஹொரவபொத்தானை, மொரவெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று நள்ளிவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், இதில் மற்றொரு நபரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்த நபர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மொரவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். 

இதன் காரணமாக அப்பிரதேசத்தில் மக்கள் தற்போது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறினார்.