வாகன விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு



கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தெரிவித்துள்ளது.
வருடத்தில் முதல் 10 மாதங்களில், வாகன விபத்துக்களில் சிக்கி 2500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
அதிகளவான விபத்துக்கள் சாரதியின் கவனக்குறைவினாலேயே இடம்பெற்றுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.