நாட்டில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக மலையகத்திலும் அசாதாரண காலநிலையே காணப்படுகின்றது. 20.12.2017 அதிகாலை 2 மணி முதல் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
அந்தவகையில் மேல் கொத்மலை நீர் தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.


Post a Comment
Post a Comment