ஊவா மாகாண கல்வி அமைச்சர் பதவியிலிருந்து சாமர சம்பத் தசநாயக்க இராஜினாமா




ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மாகாண கல்வி அமைச்சர் பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபரை முழந்தாழிடச் செய்ததாக, முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மாஅதிபரை கேட்டுள்ளதாக முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க  கூறினார்.
விசாரணைகளை சுயாதீனமாக மேற்கொள்வதற்கு இடமளிக்கும் வகையில் கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக இந்த சம்பவத்தை சிலர் பயன்படுத்த முயற்சிப்பதாகவும் ஊவா மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகியதைப் போன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகி சுயாதீன விசாரணைக்கு இடமளிக்க வேண்டும் எனவும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க வலியுறுத்தியுள்ளார்.