பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் அசோக்க சபுமல் ரன்வல என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு அவர் சப்புகஸ்கந்த பொலிஸாரிடம் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், அதற்கு பொலிஸார் மறுப்புத் தெரிவித்ததையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தரை அவர் தாக்கியுள்ளார்.
நேற்று (04) இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் மஹர நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


Post a Comment
Post a Comment