(இர்சாத்)
அக்கரைப்பற்று தொழி நுட்பக் கல்லுாரிக்கு அருகில், தனியார் காணியொன்றினுள் கடந்த 2015 காலப்பகுதியில் குற்றமுறையாக அத்துமீறி, காணிக்கு பாதிப்பு ஏற்படுத்தியாக தனிப்பட்ட பிராதில் கூறப்பட்ட சந்தேக நபர்களான, அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் அஸ்மி, முன்னாள் முதல்வர் அதாவுல்லாஹ் அலி சக்கி ஆகியோரை,தலா ரூபா 50 000/- தனிப்பட்ட பிணையில் செல்ல அக்கரைப்பற்று கௌரவ நீதிமன்ற நீதவான் திரு.பீற்றர் போல் இன்று உத்தரவிட்டார்.
இவ்வழக்கு மீண்டும் மார்ச் மாதம் அக்கரைப்ற்று நீதிவான் நீதிமன்றில், அழைக்கப்படவுள்ளது.


Post a Comment
Post a Comment