ஊவா மாகாண சபையில் அமைதியின்மை; மூன்று உறுப்பினர்களுக்கு காயம்






ஊவா மாகாண சபைக்கு முன்னால் சற்று அமைதியின்மை நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார். 

இதன்போது ஊவா மாகாண சபையின் பொதுச் சபை அமைர்வுக்காக சென்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் இருவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் இருவர் தற்போது பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.