அக்கரைப்பற்றில் நள்ளிரவில் கொள்ளை




அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில்  பொத்துவில் வீதியில், நேற்று வியாழன் பின்னிரவில்,3 கடைகள் நள்ளிரவில் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. இதில், இரு நகைக் கடைகளும், ஒரு பல் தேவைக் கடை என்பன இதில்அடங்கும்..

CCTV கெமராக்களின் கானொளிகளின் படி, முற்று முழுதாக மேலங்கி அணிந்து முகத்தை மறைத்தவரே நகைப் பெட்டியில் நகை எடுப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இக் கடைகளின் முன் கதவுப் புட்டுகளும் உடைக்கப்பட்ட நிலையில் உள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில்  இருந்து சுமார் 300 மீற்றர், துாரத்தில் இக் கடைகள் காணப்படுகின்றன. பொலிசார் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.அம்பாரைத் தடயவியல் பொலிசாரும் களத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.