பள்ளிவாயலில் உண்டியல் திருட்டு




(விஷேட நிருபர்)
காத்தான்குடியில் பள்ளிவாயலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலொன்று திருடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
புதிய காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலின் உண்டியலே திருடப்பட்டுள்ளது.
நேற்று (21) புதன்கிழமை அதிகாலை சுபஹ் தொழுகைக்கு சென்ற போது அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை காணவில்லை.
இதையடுத்து பள்ளிவாயல் வளகாத்தில் தேடிப்பார்த்த போதும் குறித்த உண்டியலை காணவில்லை. பின்னர் இது தொடர்பாக பள்ளிவாயல் நிருவாகம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பள்ளிவாயலின் தலைவர் கே.எல்.எம்.பரீட் தெரிவித்தார்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கூட்டு சக்காத் நிதியமான பைத்துஸ் ஸக்காத் நிதியத்தினால் ஸக்காத் பெறுவதற்காக இந்த உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.
இந்த உண்டியலே திருடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் காத்தான்குடி காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.