மாகாண சபை உறுப்பினரும், மனைவியையும் விளக்கமறியலில்



தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே கசுன் மற்றும் அவரது மனைவியை 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நேற்று (09) கொஸ்வத்த பகுதியில் வைத்து தனியார் பேருந்து ஓட்டுனரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரையும் தலங்கம பொலிஸார் நேற்று கைது செய்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை இன்று கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.